ஜிஎஸ்டி வரி குறித்து கோவையில் விழிப்புணர்வு பேரணி

ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை வணிகவரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்று பதாகைகளை ஏந்தியவாறு பேரணி சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கப்பட உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு பற்றி பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜிஎஸ்டி குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் கோவை வணிகவரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்று பேரணியில் ஈடுபட்டனர்.



கோவை பாலசுந்தரம் சாலையில் செயல்பட்டு வரும் வணிகவரித்துறை அலுவலகத்திலிருந்து துவங்கிய இந்தப் பேரணி வஉசி பூங்கா வரை சென்று நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் வரி செலுத்துவோர் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...