இந்தியாவில் முதல் முறையாக ஏர் ஆம்புலன்ஸ் சேவை கோவை கங்கா மருத்துவமனையில் அறிமுகம்


இந்தியாவில் முதல் முறையாக ஏர் ஆம்புலன்ஸ் சேவை கோவையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் துவங்குகிறது எனவும் ஒரு முறை பயன்பாட்டிற்கு 1.25 லட்சம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்படும் என கங்கா மருத்துவமனை இயக்குனர் டாக்டர்.ராஜசேகர் தெரிவித்தார்.



கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான கங்கா மருத்துவமனை சார்பில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை வரும் 25-ம் தேதி துவங்குகிறது. இது தொடர்பாக அந்த மருத்துவமனை இயக்குனர் டாக்டர்.ராஜசேகர் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவில் மருத்துவத்திற்காக துவங்கப்படும் முதல் ஏர் ஆம்புலன்ஸ் சேவை இது. கங்கா மருத்துவமனைக்கு என இல்லாமல் அனைத்து தனியார் மருத்துவமனைக்கும் பயன்படும் வகையில் இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவை இருக்கும். விபத்தின் போது காயமடைபவர்களை சீக்கிரமாக மருத்துவமனைக்கு கொண்டு வரவும், இருதய நோயாளிகள், உடல் உறுப்பு தானம் போன்றவற்றிக்கு இந்த சேவை பயன்படும். இந்த ஏர் ஆம்புலன்ஸில் 2 விமானிகள் 1 நோயாளி 1 மருத்துவர், 1 நோயாளியின் உறவினர் பயணிக்கலாம்.



மேலும், விமான போக்குவரத்து துறை அனுமதியுடன் ஹெலிப்பேடு அமைக்கப்பட்டு இருக்கிறது. நோயாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் இந்த ஹெலிகாப்டரில் வைக்கப்பட்டு உள்ளது. விமான நிலையங்களில் இருந்து இரவு நேரத்திலும் சேவை தொடர அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது. 



இரண்டு விமானிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள் இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவைக்கு 1 மணி நேரத்திற்கு 1.25 லட்சம் வரை கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது" என டாக்டர்.ராஜசேகரன் தெரிவித்தார்.

ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 440 கீ.மீ தூரம் வரை பயணிக்க முடியும். மலைகள் சூழ்ந்த பகுதியாக இருந்தாலும் இந்த ஹெலிகாப்டர் மூலம் பயணிக்க முடியும். மேகமூட்டத்திலும் இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவையினை தொடர முடியும்" என விமானி பட்டாசாரியா தெரிவித்தார். மேலும், இந்த ஆம்புலன்ஸ் சேவை மூலம் கோவையை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் பயன்படும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் கங்கா மருத்துவமனை தலைவர் டாக்டர். சண்முகநாதன், டாக்டர். ராஜசபாபதி, டாக்டர். ராஜசேகர், டாக்டர். ராஜா பாஸ்கர் மற்றும் மண்டல திட்ட அதிகாரி காயத்திரி அனத்தகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.





Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...