ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு தேசிய தரநிர்ணயச் சான்றிதழ் (என்ஏபிஎச்)

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை, இந்திய தரக் கவுன்சில் வழங்கும் அங்கீகாரச் சான்றினை பெற்றுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சுகாதார கவனிப்பு தேசிய அங்கீகார வாரியம் (என்ஏபிஎச்எல்) இதை வழங்கியுள்ளது.

மருத்துவமனைக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் குறித்து, மருத்துவமனையை நிர்வாகித்து வரும் எஸ்என்ஆர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஆர்.விஜயக்குமார் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளாக படிப்படியான வளர்ச்சியை எட்டி வரும் இந்த மருத்துவமனைக்கு, நோயாளிகளின் கவனிப்புக்கு இந்த சான்றால் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, திறன் போன்றவைகளில் என்ஏபிஎச் நிர்ணயித்த தரத்தில் எங்களது சேவைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்,” என்றார்.

என்ஏபிஎச், சான்றுக்கான தேவையான முறைகளில், மருத்துவமனையின் சீரிய நிர்வாகம், தீ விபத்திலிருந்து பாதுகாப்பு, பேரிடர் கையாளும் திறன், தொற்று நோய் தடுப்பு பயிற்சிகள், செவிலியர் அழைப்பு முறைகள், கருவிகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, நோயாளிகளின் கருத்துக்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான தரச்சோதனைகள், பணியாளர் திருப்திபோன்றவை மருத்துவமனையின் தரமான செயல்பாடுகளாக மட்டுமின்றி, நிலையானதாகவும் இருக்கும் என்ற உறுதியை அளித்துள்ளது.

நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு நிர்ணயங்களை மிகவும் சரியாக அளிக்க இந்த என்ஏபிஎச் சான்று, தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. தரமான சிகிச்சை அளிப்பதால், வாழ்க்கையை வளமிக்க நலமானதாக மாற்றுவதோடு மட்டுமின்றி, பல்வேறு சமுதாய சேவைகளையும் மேற்கொண்டு பல சாதனைகளையும் படைத்துள்ளது. எட்டு மணி நேரத்தில் உடல் உறுப்பு தான உறுதி மொழியை அதிகம் பெற்று கின்னஸ் சாதனையிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...