கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு மேற்கொண்டார். மழைக்காலத்தில் குழாய் பாலத்தில் அடைப்பு ஏற்படுவதால் புதிய சிறுபாலம் அமைக்க அறிவுறுத்தப்பட்டது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 12க்குட்பட்ட உடையாம்பாளையம் பகுதியிலுள்ள இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் எளிதாக வடிவதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று (24.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



மழைக்காலங்களில் ஆணைகட்டி பரப்பளவிலுள்ள மழைநீர், பன்னிமடை வாய்க்கால் வழியாக வெள்ளக்கிணறு குட்டையிலிருந்து இராஜவாய்க்கால் தரைமட்ட குழாய் பாலத்தின் வழியாக சிங்காநல்லூர் கால்வாய் வழியாக செல்கிறது. அங்கிருந்து நொய்யல் ஆற்றில் கலக்கப்படுகிறது. எனினும், மழைக்காலத்தில் இராஜவாய்க்கால் குழாய் பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் தேங்கும் வாய்ப்பு உள்ளது.


இதனால், அப்பகுதியிலுள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை சாலையில் புதிதாக சிறுபாலம் அமைக்க உரிய திட்டமதிப்பீடு தயாரித்து பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினார். இது மழைநீர் வடிகால் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த ஆய்வின்போது மாநகர நல அலுவலர் Dr சுபாஷ் காந்தி, உதவி ஆணையர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் இராமமூர்த்தி, மண்டல சுகாதார அலுவலர் முருகன், உதவி பொறியாளர்கள் கோபிநாத், கணேசன், ஜெயின்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...