கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு மேற்கொண்டார். மழைக்காலத்தில் குழாய் பாலத்தில் அடைப்பு ஏற்படுவதால் புதிய சிறுபாலம் அமைக்க அறிவுறுத்தப்பட்டது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 12க்குட்பட்ட உடையாம்பாளையம் பகுதியிலுள்ள இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் எளிதாக வடிவதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று (24.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



மழைக்காலங்களில் ஆணைகட்டி பரப்பளவிலுள்ள மழைநீர், பன்னிமடை வாய்க்கால் வழியாக வெள்ளக்கிணறு குட்டையிலிருந்து இராஜவாய்க்கால் தரைமட்ட குழாய் பாலத்தின் வழியாக சிங்காநல்லூர் கால்வாய் வழியாக செல்கிறது. அங்கிருந்து நொய்யல் ஆற்றில் கலக்கப்படுகிறது. எனினும், மழைக்காலத்தில் இராஜவாய்க்கால் குழாய் பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் தேங்கும் வாய்ப்பு உள்ளது.


இதனால், அப்பகுதியிலுள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை சாலையில் புதிதாக சிறுபாலம் அமைக்க உரிய திட்டமதிப்பீடு தயாரித்து பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினார். இது மழைநீர் வடிகால் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த ஆய்வின்போது மாநகர நல அலுவலர் Dr சுபாஷ் காந்தி, உதவி ஆணையர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் இராமமூர்த்தி, மண்டல சுகாதார அலுவலர் முருகன், உதவி பொறியாளர்கள் கோபிநாத், கணேசன், ஜெயின்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...