சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சாக்கடை சுத்தம், குப்பை மேலாண்மை பணிகளை ஆய்வு செய்தார்.


Coimbatore: கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27-ல் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சேவை வழங்கும் வகையில் 'தாயுமானவர்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பீளமேடு சிந்தாமணி நியாய விலை கடை மூலம் பயனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.




சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இப்பகுதியில், நடமாட முடியாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த சேவை பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இந்நிகழ்வை நேரில் சென்று ஆய்வு செய்து, பயனாளிகளின் நலனை விசாரித்தார். நியாய விலை கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.




மேலும், வார்டு 27-ல் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. பேரா நாயுடு வீதி, திருவேங்கடசாமி வீதி, ஆனந்த் திருவேங்கடசாமி வீதி பகுதிகளில் சாக்கடை மற்றும் சாலையோரத்தில் வளர்ந்த செடிகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று இப்பணிகளை ஆய்வு செய்து, தூய்மை பணியாளர்களிடம் முழுமையான சுத்தம் செய்யுமாறு வலியுறுத்தினார்.




சின்னசாமி அவன்யூ பகுதியிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சாலையோரத்தில் குவிந்திருந்த குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டன. கவுன்சிலர் இப்பணியை ஆய்வு செய்து, தினசரி சாலையோர குப்பைகளை சுத்தம் செய்யும்படி தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.




ரங்கம்மாள் கோயில் வீதி பகுதியில், குப்பை சேகரிப்பு பணிகள் சரியாக நடைபெறுகிறதா என்பதை கவுன்சிலர் ஆய்வு செய்தார். தினசரி குப்பை வாங்கும் பேட்டரி ஆட்டோ சரியான நேரத்தில் வருகிறதா என்று பார்வையிட்டார். பொதுமக்களிடம் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து தரும்படி வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...