அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சேவைகள், மருத்துவ வசதிகளின் தரம் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.


சென்னை: சென்னையில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாநில அளவிலான இணை இயக்குநர் சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் தேனாம்பேட்டை அலுவலக வளாகத்தில் உள்ள தேசிய சுகாதாரக் குழும கலந்தாய்வுக் கூடத்தில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சேவைகள், மருத்துவ வசதிகளின் தரம் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்றும், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களை உரிய மரியாதையுடன் அணுகி தேவையான சிகிச்சைகள் மற்றும் சேவைகள் உடனுக்குடன் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுறுத்தினார்.

மேலும், அரசு மருத்துவமனைகளின் தூய்மை மற்றும் தரத்தை மதிப்பீடு செய்ய வழங்கப்படும் “காயகல்ப்” தரச் சான்றிதழுக்கான ஆய்வுகளை ஆண்டிற்கு ஒருமுறை நடத்துவதற்கு பதிலாக, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காலாண்டு அடிப்படையில் நடத்தி சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதேபோல், தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் CEA உரிமச் சான்றிதழ்களில் நிலுவையில் உள்ள சுமார் 8000 விண்ணப்பங்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும், ஆன்லைன் மூலம் தேவையான ஆவணங்கள் மற்றும் தகவல்களை பதிவேற்றம் செய்தவுடன் தற்காலிக சான்றிதழ்களை உடனடியாக வழங்கி, பின்னர் முழுமையான ஆய்வுக்குப் பிறகு நிரந்தர சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

Newsletter

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...