கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்டவாள பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுவரை 7 சிறார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோவை:

சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ் செயல்படும் கோவை, வடகோவை, போத்தனூர், திருப்பூர் உள்ளிட்ட 93 ரயில் நிலையங்கள் உள்ளன. சமீப காலமாக இருகூர் - போத்தனூர், கோவை - வடகோவை மற்றும் சிங்காநல்லூர் பகுதிகளுக்கு இடையேயான ரயில் வழித்தடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த ஆண்டில் ஒண்டிப்புதூர் மற்றும் ப்ரூக்ஃபீல்டு பின்புறம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த மூன்று சம்பவங்களில், வந்தே பாரத் ரயிலின் கண்ணாடி மற்றும் இன்ஜின் விளக்குகள் சேதமடைந்ததுடன், சரக்கு ரயிலும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவங்களில் தொடர்புடையதாக 7 சிறார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ரயில்கள் மீது கல்வீச்சு நடத்துவது மனித உயிருக்கும் ரயில்வே பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், சம்பவங்கள் நடைபெறும் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறினர்.

மேலும், சிறார்களின் செயல்களுக்கு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களும் பொறுப்பேற்க வேண்டி வரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் மீது கல்வீச்சு தொடர்பான புகார்களை 139 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...