மதுபானக் கடை குறித்து நடவக்கை எடுக்கத்தவறிய ஆட்சியரைக் கண்டித்து வீரகேரளம் பொதுமக்கள் சாலை மறியல்

மதுபானக் கடையை 15 நாட்களுக்குள் அகற்றித் தருவதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்து ஒரு மாதமாகியும் மூடப்படாததால் வீரகேரளம் பொதுமக்கள் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உச்சநீதிமன்றம், நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகளில் உள்ள மதுபான கடையை அகற்ற உத்திரவிட்டும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மதுபானக் கடைகள் செயல்பட்டுக் கொண்ணடே வருகிறது. அதனை எதிர்த்து பொதுமக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகதியாக வீரகேரளம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி இரண்டுமுறை மாவட்ட ஆட்சியரிம் மனு அளித்தும் பயனில்லாததால் அப்பகுதி பொதுமக்கள் வீரகேரளம்- வேடபட்டி சாலையில் மதுபானக் கடை எண் 8465 முன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே, பதினைந்து நாட்களுக்குள் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தும் இதுவரை செயல்படுத்தவில்லை என்பதால் பொதுமக்கள் மூடப்பட்டிருந்த கடை மீது கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மதுபான கடையால் பெண்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் சாலையில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு நம்பர் லாட்டரியும் கடையருகே செயல்படுவதாகவும், குடிமகன்கள் பெண்களைப்பார்த்து தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் குற்றம் சாட்டினர்.

அரசு அதிகாரிகள் கடை செயல்படாது என எழுத்துப்பூர்மாக எழுதிக்கொடுத்தும் செயல்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கடையை தீயிட்டு கொளுத்தப்போவதாக காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பொதுமக்களிடம் பேசிய காவல்துறையினர் கடை இனிமேல் செயல்படாது என உறுதியளித்த பின்பு பொதுமக்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். திரும்ப கடை செயல்படத் துவங்கினால் கட்டாயம் எரிக்க தயாராக இருப்பதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...