அருந்ததியினருக்கான பாதை ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதாக ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

கோவை மாவட்டம் செங்கத்துறை பகுதியில் அருந்ததியர் மக்களுக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையை மற்றொரு பிரிவினர் ஆக்கிரமித்ததை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவையை அடுத்த சூலூர் அருகேயுள்ள செங்கத்துறை பகுதியில் அருந்ததியர் மக்களுக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான நிலம், அம்மனை ஊர்வலமாக எடுத்து செல்லும் பாதை உள்ளிட்ட நிலத்தை, அப்பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 10-ம் தேதி மாரியம்மனை ஊர்வலமாக எடுத்து செல்லும் போது, பழனிச்சாமி உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தியதாகவும், இதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அருந்ததியர் மக்களுக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்ககோரி, அப்பகுதி பொதுமக்கள், தீண்டாமை ஒழிப்பு முண்னனி, ஆதித்தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்பினருடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பழனிச்சாமி என்பவர் மாரியம்மம் கோவில் நிலம், அரசு புறம்போக்கு நிலம் உள்ளிட்ட 10 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாகவும், மாரியம்மனை எடுத்து சென்ற போது தடுத்து நிறுத்தி சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தியதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத் தர வேண்டுமெனவும், அருந்ததிய மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டுமெனவும், பழனிச்சாமி உள்ளிட்டவர்களை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...