ப்ளஸ்-2 பொதுத் தேர்வு: கோவை மாநகராட்சி பள்ளிகளில் 91.80 சதவிகிதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி


கோவை மாநகராட்சியில் உள்ள 16 மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 2206 மாணவ, மாணவியர்களில் 2025 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்று, 91.80 தேர்ச்சி சதவிகிதம் பெற்றுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியில் 16 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 11 உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் கடந்த மார்ச் 2017-ல் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 2206 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர்.

இந்த தேர்விற்கான தேர்வு முடிவுகள் இன்று (மே 12) வெளியிடப்பட்டன. இதில் 2025 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 16 மேல்நிலைப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் 91.80 ஆகும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.94, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94.03. இது சென்ற ஆண்டு தேர்ச்சி சதவீதத்தைவிட 3 சதவீதம் அதிகமாகும்.

மேலும், பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த பள்ளி கடந்த ஆண்டும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடந்து வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 98.82 தேர்ச்சி சதவீதமும், ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 98.55 தேர்ச்சி சதவீதமும், மாநகராட்சி பா.கமலநாதன் நினைவு மேல்நிலைப்பள்ளி 97.74 தேர்ச்சி சதவீதமும், இர.ச.புரம் (மேற்கு) மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97.20 தேர்ச்சி சதவீதமும், இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 95.79 தேர்ச்சி சதவீதமும் பெற்றுள்ளன.

மேலும், செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 95.29 தேர்ச்சி சதவீதமும், ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 94.53 தேர்ச்சி சதவீதமும், மாநகராட்சி எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 93.45 தேர்ச்சி சதவீதமும், மாநகராட்சி சிட்டி மேல்நிலைப்பள்ளி 90.22 தேர்ச்சி சதவீதமும், சித்தாபுதூர் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி 89.47 தேர்ச்சி சதவீதமும், அரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 88.69 தேர்ச்சி சதவீதமும் பெற்றுள்ளது.

இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 85.63 தேர்ச்சி சதவீதமும், உடையாம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 84.51 தேர்ச்சி சதவீதமும், இராமநாதபுரம் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி 80.56 தேர்ச்சி சதவீதமும், இர.ச.புரம் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி 69.72 தேர்ச்சி சதவீதமும் ஆகமொத்தம் 16 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 91.80 ஆகும்.

மேலும் பாடப் பிரிவுகளில் கணக்குப் பதிவியலில் 9 மாணவ, மாணவியர்களும், வணிகவியலில் 38 மாணவ, மாணவியர்களும், பொருளியலில் 4 மாணவ, மாணவியர்களும், வணிக கணிதத்தில் 2 மாணவ, மாணவியர்களும் என மொத்தம் 53 மாணவ, மாணவியர்கள் முழு மதிப்பெண்ணான 200-க்கு 200 பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் 2016-ல் நடைபெற்ற பொதுத் தேர்வின் பாடப் பிரிவுகளில் 19 மாணவ, மாணவியர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர்.

மேலும், மாநகராட்சிப் பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, இம்மாணவ, மாணவியர்களை ஊக்குவித்து, வழிநடத்திய பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.



Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...