“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதிவு செய்ததாக குற்றம்சாட்டி, குடும்பத்துடன் கோவை மாவட்ட எஸ்பி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்.


Coimbatore: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இன்று பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டம் தெக்கலூரைச் சேர்ந்த சித்ரா என்பவருக்கு கோவை கணியூர் பகுதியில் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிலம் தொடர்பாக ராஜேந்திரன் என்பவருடன் நீண்டநாள் தகராறு இருந்து வரும் நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி ராஜேந்திரன் மற்றும் ராஜா ஆகியோர் 10-க்கும் மேற்பட்ட நபர்களுடன் வந்து கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் அங்கு இருந்தவர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள், டி.வி.ஆர்., சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் அளித்தபோதும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல், எதிர் தரப்பின் புகாரின் அடிப்படையில் தங்கள்மீதே வழக்குப் பதிவு செய்துள்ளதாக சித்ரா தரப்பினர் குற்றம்சாட்டினர்.

இதனிடையே, கடந்த 30ஆம் தேதி ஜமுனாதேவி என்பவரிடம் தகராறு செய்ததாக மீண்டும் தங்கள்மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினம் குடும்ப துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டிலேயே இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

“வீட்டில் கருப்பு காரியம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் எவ்வாறு நிலத்திற்குச் சென்று தகராறு செய்ய முடியும்?” என கேள்வி எழுப்பிய அவர்கள், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என தெரிவித்தனர்.

தங்கள்மீது திட்டமிட்டு பொய் வழக்குப் பதிவு செய்த காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சித்ரா தனது குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...