“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதிவு செய்ததாக குற்றம்சாட்டி, குடும்பத்துடன் கோவை மாவட்ட எஸ்பி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்.


Coimbatore: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இன்று பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டம் தெக்கலூரைச் சேர்ந்த சித்ரா என்பவருக்கு கோவை கணியூர் பகுதியில் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிலம் தொடர்பாக ராஜேந்திரன் என்பவருடன் நீண்டநாள் தகராறு இருந்து வரும் நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி ராஜேந்திரன் மற்றும் ராஜா ஆகியோர் 10-க்கும் மேற்பட்ட நபர்களுடன் வந்து கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் அங்கு இருந்தவர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள், டி.வி.ஆர்., சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் அளித்தபோதும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல், எதிர் தரப்பின் புகாரின் அடிப்படையில் தங்கள்மீதே வழக்குப் பதிவு செய்துள்ளதாக சித்ரா தரப்பினர் குற்றம்சாட்டினர்.

இதனிடையே, கடந்த 30ஆம் தேதி ஜமுனாதேவி என்பவரிடம் தகராறு செய்ததாக மீண்டும் தங்கள்மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினம் குடும்ப துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டிலேயே இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

“வீட்டில் கருப்பு காரியம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் எவ்வாறு நிலத்திற்குச் சென்று தகராறு செய்ய முடியும்?” என கேள்வி எழுப்பிய அவர்கள், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என தெரிவித்தனர்.

தங்கள்மீது திட்டமிட்டு பொய் வழக்குப் பதிவு செய்த காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சித்ரா தனது குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

Newsletter

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...