ஆனைமலை வனப்பகுதியில் வசிக்கும் மக்களை ஒருமையில் பேசிய வட்டாட்சியர் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு



கோவை மாவட்டம் ஆனைமலை வனப்பகுதிகளில் வாழும் மலைகிராம பழங்குடி மக்களை ஒருமையில் பேசிய வட்டாசியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மலை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

நீதிமன்ற உத்தரவு படி பழங்குடி சட்டமான வன உரிமை சட்டத்தை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பொள்ளாச்சி ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான வட்டாச்சியர் அலுவலகத்தில் சர் ஆட்சியர் தலைமையில் கடந்த 8 ஆம் தேதி கூட்டம் நடைபெற்றது.

ஆனைமலை வனப்பகுதிகளில் 17 மலைகிராமங்கள் உள்ள நிலையில், இந்த கூட்டம் தொடர்பான தகவலை மலை கிராம மக்களுக்கு தெரிவிக்காமல் அரசு அதிகாரிகள் ஒரு சில மலை கிராம மக்களை கொண்டு நடத்தி உள்ளனர். ஆனால், 17 கிராம மக்களையும் அழைத்தது போல் போலியாக பதிவிட்டுள்ளனர். 

மேலும், கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது போல் மலைகிராம மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு பதிவும் நடைபெற்றுள்ளது. இது தெரிந்த பிறகு விண்ணப்பங்களை பெற மலை கிராம மக்கள் சென்று கேட்ட போது ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான வட்டாச்சியர் சக்திவேல் "நீங்கள் மலைகிராமத்தில் இருப்பதால் எந்த பயனும் இல்லை. உங்களுக்கு படிக்க தெரியுமா" என பல்வேறு விதமாக ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து, ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான வட்டாச்சியர் சக்திவேல் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மற்றும் பழங்குடியினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...