உதகை மலை ரயில் தடத்தில் சரிந்த மண்ணை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரம்

குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பலத்த சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில், நீலகிரி, குன்னூர், உதகை உள்ளிட்ட பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது.



இதில், உதகை மலை ரயில் தடத்திலும் மண்சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மேட்டுப்பாளையம் ரயில்வேத்துறை அதிகாரிகள் உதகை ரயில் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை பொக்லைன் மூலம் அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதனிடையே, சீரமைப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் தண்டவாளத்தில் விழுந்த மரத்தில் மோதிய சரக்கு ரயிலால் இருவர் காயம் அடைந்தனர்.



இந்த நிலையில் மலை ரயில் இயக்கப்படாததால் முன்பதிவு செய்த சுற்றுலா பயணிகள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது, பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருவதால் நாளை முதல் மலை ரயில் சேவை துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...