காணொளி காட்சி மூலம் ரூ.28 கோடியே 51 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை தமிழக முதலமைச்சர் கோவையில் திறந்து வைத்தார்


கோவை மாவட்டத்தில் வீடு இல்லாத ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் சுகுணாபுரம் பகுதியில் ரூ.4.33 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 64 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குறிஞ்சி நகர் திட்டப் பகுதியில் 10.69 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 160 குடியிருப்புகளையும், 1.72 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய சரக அலுவலக கட்டிடத்தையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொளி காட்சி முலம் துவக்கி வைத்தார்.



மேலும், வீட்டுவசதி வாரியம் மூலம் பொள்ளாச்சி வட்டம், சின்னம்பாளையம் கிராமத்தில் அரசு அலுவலர்களுக்கு 11.77 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 108 அடுக்குமாடி வாடகை குடியிருப்புகளையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொளி காட்சி மூலம் கோவையில் துவக்கி வைத்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக தமிழக அரசின் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த பொதுமக்கள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தனர்.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...