தொண்டாமுத்தூரில் AIADMK வேலுமணி வேட்புமனு: அண்ணாமலை உடன் தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் S.P. வேலுமணி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். BJP முன்னாள் மாநில தலைவர் K. அண்ணாமலை மற்றும் கூட்டணி நிர்வாகிகள் உடன் சென்று பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார். பின்னர் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.


Coimbatore: தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் S.P. வேலுமணி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். BJP மாநில முன்னாள் தலைவர் K. அண்ணாமலை மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக, அதிகாலையில் இருந்தே தொண்டாமுத்தூர் தொகுதி முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான AIADMK தொண்டர்கள் பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். கட்சிக் கொடிகளுடன் பெரும் ஊர்வலமாக வந்த S.P. வேலுமணிக்கு தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் BJP மாநில முன்னாள் தலைவர் K. அண்ணாமலை, AIADMK மற்றும் கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.





வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய S.P. வேலுமணி, "தொண்டாமுத்தூர் தொகுதியில் மக்கள் மீண்டும் எனக்கு வெற்றி வாய்ப்பு வழங்குவார்கள் என்று நம்புகிறேன். கடந்த காலங்களில் இத்தொகுதிக்கு நான் செய்த வளர்ச்சி பணிகளை மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் DMK கூட்டணி தோல்வியை சந்திக்கும் என்பது உறுதி" என்று தெரிவித்தார்.





வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சிக்குப் பிறகு, S.P. வேலுமணி தனது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். தொண்டாமுத்தூர் தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்டார். இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து பேசினார்.

கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் குறித்தும், தொகுதியின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்தும் மக்களிடம் விளக்கினார். வெற்றி பெற்றால் மீண்டும் தொகுதியை வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்வேன் என்று உறுதியளித்தார். வாக்கு சேகரிப்பு பணியில் அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....