கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்


மருத்துவ மேற்படிப்பிற்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ததைக் கண்டித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து கடந்த 20 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும், இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணி புறக்கணிப்பு, தர்ணா, சாலை மறியல், மனித சங்கிளி உள்ளிட்டு மாணவர்களும், மருத்துவர்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இப்போராட்டம் குறித்து அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் கவுன்சிலிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இதனைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவ மாணவர்கள், அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மாணவர் கவுன்சிலிலும் பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...