தனியார் சுற்றுலா வாகன ஓட்டிகளால் உள்ளூர்வாசிகள் பாதிக்கப்படுவதாக குன்னூர் சுற்றுலா வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை கால விடுமுறையினை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் நிலகிரி, குன்னூர் பகுதிகளுக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்வர்.

இவ்வாறாக வரும் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு உட்பட்ட கோத்தகிரி, குன்னூர், உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், காட்சிமுனை, படகுஇல்லம், பூங்கா அகிய பகுதிகளுக்குச் செல்லவும் பெரும்பாலும் அப்பகுதிவாசிகளால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா வாகனங்களையே நாடிச்செல்வர்.

இந்நிலையில், தற்போது பல்வேறு சமவெளிப்பகுதிகளிலும் தனியார் வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள் சுற்றுலா வாகனங்களை இயக்கி வருவதால் சுற்றுலாப் பயணிகள் உள்ளூர்வாசிகளின் வாகனங்களை நாடுவது குறைந்துவிட்டது.

இதன் மூலம் வருமானம் ஈட்டிவந்த குன்னூர் சுற்றுலா வாகன ஓட்டிகள் வருமானமின்றி பெரிதும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

குன்னூர் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத் துறையும் குன்னூர் சுற்றுலா வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என குன்னூர் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...