கோவை கிழக்கு மண்டலத்தில் மேயர் ஆய்வு: வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்கள் குறைகள் கேட்டறிதல்

கோவை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் கிழக்கு மண்டலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்து, நீலிக்கோணாம்பாளையத்தில் பொதுமக்கள் குறைகளைக் கேட்டறிந்தார். சாலை மேம்பாடு, சுகாதார நிலையம் கட்டுமானம் ஆகியவை முக்கிய கவனம் பெற்றன.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், இன்று (04.09.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.





இந்த ஆய்வின்போது, கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.53க்குட்பட்ட மசக்காளிபாளையம் சாலையில் (TURIP) தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டம் 2022-23ன் கீழ் ரூ.75.45 இலட்சம் மதிப்பீட்டில் 1070 மீட்டர் தொலைவிற்கு தார் சாலை பணியினையும் மற்றும்



வார்டு எண்.54க்குட்பட்ட நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் 15வது மத்திய குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.1.48 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நகர்ப்புற சுகாதார நிலைய கட்டுமானப்பணியினையும் மாண்புமிகு மேயர் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.



அதனைத்தொடர்ந்து, கிழக்கு மண்டலம் வார்டு எண்.61க்குட்பட்ட சிங்காநல்லூர் பகுதியில் தேசிய நகர்ப்புற சுகாதாரப் பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.1.20 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினையும் மற்றும் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியினையும் மாண்புமிகு மேயர் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு பள்ளியில் உள்ள வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும், வார்டு எண்.54க்குட்பட்ட நீலிக்கோணாம்பாளையம் பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆணையர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர்கள் மோகன், பாக்கியம், சிவா, ஆதிமகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணா, உதவி நகர திட்டமிடுநர் புவனேஷ்வரி, உதவி பொறியாளர் ஜெகதீஸ்வரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தார்கள்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...