திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் சுப்பராயன் 1,25,928 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

வெற்றி பெற்றதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்த சுப்பராயன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜிடமிருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார்.


திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் சுப்பராயன் 125928 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்த சுப்பராயன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜிடமிருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார். உடன் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பே. சாமிநாதன் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கா. செல்வராஜ் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

சான்றிதழ் பெற்ற பின்னர் வெளியே வந்த சுப்பராயன் செய்தியாளர்களை சந்தித்தபோது,

மக்களை மடைமாற்ற முயன்ற மோடி அமைச்சரவையின் தாக்குதலையும் கட்டமைத்த பொய்யையும் மக்கள் பொடிப்பொடி ஆக்கி விட்டார்கள். கருத்து திணிப்பு உண்மை இல்லை. மோடியின் உள்நோக்கத்தை பாதுகாக்க கட்டமைத்த ஒன்று என்று மக்கள் நிரூபித்து விட்டனர்.



இந்தியா கூட்டணி நிச்சயம் அதிகாரத்திற்கு வரும். இந்திய வரலாற்றில் மறக்க முடியாதவர் ஜவகர்லால் நேரு. 17 காலம் ஆண்ட அவரால் கட்டமைக்கப்பட்டஜனநாயக அரசியல் அமைப்பை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்து ஜனநாயக அரசியல் அமைப்பை தகர்கின்ற வேலைகளை மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் என்பதை இந்த தீர்ப்பு காட்டுகிறது. ஜனநாயக அரசியல் அமைப்பு காப்பாற்றப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத்தில் நாங்கள் சிலராக இருந்தோம்.

இன்றைக்கு சரி சம பலத்துடன் உள்ளே செல்கிறோம். அரசியல் அமைப்புக்கு எதிராக தாண்டவமாட முடியாது. அந்த அளவு மிகுந்தபலத்தோடு மக்கள் எங்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள். நல்லதே நடக்கும் இன்னும் இரண்டு ஒரு தினங்களில் முழு விவரம் வெளிப்படும். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஜனநாயக அரசியல் அமைப்பு காப்பாற்றப்பட வேண்டும். 10 ஆண்டு அரசியல் பொருளாதார சமூக வாழ்வில் இழைக்கப்பட்ட தீங்கில் இருந்து விடுவிக்க புதிய அரசு மேற்கொள்ளும். இந்த அணி மேற்கொள்ளும். என தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...