திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் சுப்பராயன் 1,25,928 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

வெற்றி பெற்றதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்த சுப்பராயன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜிடமிருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார்.


திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் சுப்பராயன் 125928 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்த சுப்பராயன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜிடமிருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றார். உடன் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பே. சாமிநாதன் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கா. செல்வராஜ் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

சான்றிதழ் பெற்ற பின்னர் வெளியே வந்த சுப்பராயன் செய்தியாளர்களை சந்தித்தபோது,

மக்களை மடைமாற்ற முயன்ற மோடி அமைச்சரவையின் தாக்குதலையும் கட்டமைத்த பொய்யையும் மக்கள் பொடிப்பொடி ஆக்கி விட்டார்கள். கருத்து திணிப்பு உண்மை இல்லை. மோடியின் உள்நோக்கத்தை பாதுகாக்க கட்டமைத்த ஒன்று என்று மக்கள் நிரூபித்து விட்டனர்.



இந்தியா கூட்டணி நிச்சயம் அதிகாரத்திற்கு வரும். இந்திய வரலாற்றில் மறக்க முடியாதவர் ஜவகர்லால் நேரு. 17 காலம் ஆண்ட அவரால் கட்டமைக்கப்பட்டஜனநாயக அரசியல் அமைப்பை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்து ஜனநாயக அரசியல் அமைப்பை தகர்கின்ற வேலைகளை மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் என்பதை இந்த தீர்ப்பு காட்டுகிறது. ஜனநாயக அரசியல் அமைப்பு காப்பாற்றப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத்தில் நாங்கள் சிலராக இருந்தோம்.

இன்றைக்கு சரி சம பலத்துடன் உள்ளே செல்கிறோம். அரசியல் அமைப்புக்கு எதிராக தாண்டவமாட முடியாது. அந்த அளவு மிகுந்தபலத்தோடு மக்கள் எங்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள். நல்லதே நடக்கும் இன்னும் இரண்டு ஒரு தினங்களில் முழு விவரம் வெளிப்படும். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஜனநாயக அரசியல் அமைப்பு காப்பாற்றப்பட வேண்டும். 10 ஆண்டு அரசியல் பொருளாதார சமூக வாழ்வில் இழைக்கப்பட்ட தீங்கில் இருந்து விடுவிக்க புதிய அரசு மேற்கொள்ளும். இந்த அணி மேற்கொள்ளும். என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...