காரமடையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்கத்திற்கு திமுக துணை பொதுசெயலாளர் சுப்புலட்சுமி ஜகதீசன் ஆதரவு


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையைம் அருகே காரமடையில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தில்லியில் நடைபெறும் விவசாயிகள் ஆர்பாட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், பவானியின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு தடுக்கக்கோரியும், வன விலங்கு தொல்லையால் விவசாயம் பாதிக்கப்படுவதால் விவசாயிகளே வன விலங்குகளை துப்பாக்கியில் சுட்டு விரட்டவும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காரமடை கார் ஸ்டாண்டு அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே, காரமடையில் திமுக-வின் செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்ட நிழச்சியில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமை திறந்து வைக்க வந்த திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜகதீசன், விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தந்து பேசினார்.

அவர் பேசுகையில், இந்த நாட்டின் முதுகெலும்பாக வாழ்பவர்கள் விவசாயிகள். இவர்களை புழு பூச்சிகளாக, கிள்ளு கீரைகளாக இந்த அரசாங்கம் நினைத்துக்கொண்டு இருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகாலமாக ஏற்பட்ட வறட்சியின் காரணமாக விவசாய குடும்பங்களில் பெரியர்கள் முதல் குழந்தைகள் வரை தற்கொலை செய்துகொண்டது இதுவே முதல் முறையாக உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை மதிக்காமல் உள்ளது. மேலும் பிரதமர் மோடி தமிழகம், கோவை வந்து சென்றார். தமிழகம் வந்த பிரதமர் விவசாயிகளின் குறைகளுக்கு செவி மடுக்காமல் சென்றது வேதனையளிக்கிறது என பேசினார். 

முன்னதாக, காரமடையில் நடைபெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். இதில், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...