டீசல், பெட்ரோல் மீதான வாட்வரி குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்


காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் லாரி உரிமையாளர்கள் டீசல், பெட்ரோல் மீதான வாட் வரியினை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



டீசல், பெட்ரோல் மீதான வாட் வரி அதிகரிப்பு, வாகன இன்சூரன்ஸ் கட்டண உயர்வு, 15 வருட பழைய வாகன இயக்கத்தடை, காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே தமிழக போக்குவரத்து துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, லாரி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக இன்று வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரத்து 500 லாரிகள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

இப்போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லாரி உரிமையாளர்கள் முன்வைத்துள்ள 6 கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்திருந்தாலும், தமிழக அரசு லாரி உரிமையாளர்களின் பிரச்சனைகளை அலட்சியப்படுத்துவதாக குற்றம்சாட்டிய லாரி உரிமையாளர்கள், கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை வேலை நிறுத்தம் தொடருமென தெரிவித்தனர்.

இந்த வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை தேக்கமடைந்து இருப்பதாகவும், கோவை மாவட்டத்தில் லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...