தமிழக பிசியோதெரபி மருத்துவ கவுன்சில் உருவாக்க வேண்டும் என தமிழக பிசியோதெரபி மருத்துவர்கள் மாநாட்டில் தீர்மானம்

கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் பிசியோதெரபி மருத்துவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளும் சட்ட ரீதியான அணுகுமுறையும் என்ற தலைப்பில் மாநில மாநாடு நடைபெற்றது. கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர். ராஜா செல்வகுமார் மாநாட்டை தொடங்கி வைத்து வரவேற்று பேசினார்.


அதனைத் தொடர்ந்து மாநாடில் சிறப்பு விருந்தினராக பெங்களூர் பிசியோதெரபி மருத்துவர்கள் கூட்டமைப்பின் சார்பில் டாக்டர் ஐன்டீன் கலந்து கொண்டு பிசியோதெரபி மருத்துவர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்தும் அதனை சரி செய்யும் சட்ட ரீதியான அணுகு முறைகள் குறித்தும் விவாதித்தார்.

இதனைத்தொடர்ந்து பிசியோதெரபி மருத்துவத்தை ஆவனபடுத்தும் முறை குறித்து டாக்டர். ராம் பிரகாஷ் உரையாற்றினார். இதில் தமிழக பிசியோதெரபி மருத்துவ கவுன்சில் உருவாக்க தமிழக அரசை வலியுறுத்துவது, ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பிசியோதெரபி சிகிக்சையை சேர்க்க வலியுறுத்துவது, பிசியோதெரபி மருத்துவர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.



மாநாட்டில் பிசியோதெரபி மருத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பணியாற்றிய சென்னையை சேர்ந்த டாக்டர் ஹரிஷ் குமார்-க்கு டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம் நினைவு விருதும், ஈரோட்டை சேர்ந்த டாக்டர். விஜயராஜ்-க்கு பிசியோ எக்சலென்சி விருதும் வழங்கி கௌரவிக்கபட்டனர்.

இறுதியாக பிசியோதெரபி மருத்துவம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடல் வெளியிடப்பட்டது. நிறைவாக கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் டாக்டர்.ராஜேஷ் கண்ணா நன்றி தெரிவித்தார்

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...