ஐயப்பன் சுவாமி கோவிலில் பார்வையாளர்களை கவர்ந்த 'நாட்டிய சிலை' நடனம்

கோவை, சித்தாபுதூர் ஐயப்பன் சுவாமி கோவிலில் 48வது ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. மார்ச் 25-ம் தேதி சனிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் துவங்கி ஏப்ரல் மாதம் 1ம் தேதி சனிக்கிழமை வரை ஆறாட்டு திருவீதி உலாவுடன் இவ்விழா நிறைவடையவுள்ளது.



கொடியேற்ற நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக கோவை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் இணை ஆணையர் இளம்பரிதி கலந்து கொண்டு கொடியேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.



48வது ஆண்டு திருவிழாவில் ஒன்பது நாட்கள் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து மாலை நேரம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.



திங்களன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் மற்றும் கோவை முன்னாள் மேயர் கணபதி ப.ராஜ்குமார் ஆகியோர் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டனர்.



திருவனந்தபுரம் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு உறுப்பினர் அஜய் தலைமையில் கோழிக்கோடு மிமிக்ஸ் அல்டரா குழுவினரின் செமி கிளாசிக்கல் நடனம் 'நாட்டிய சிலை' கலைநிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.



Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...