கேம்பஸ் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில மாணவ எழுச்சி மாநாடு

தேசிய மாணவ இயக்கமான கேம்பஸ் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில மாணவ எழுச்சி மாநாடு கோவையில் நடைபெற்றது. மாநாட்டின் துவக்கமாக மாணவர்களின் எழுச்சி பேரணி கோவை கோட்டைமேடு வின்செட் ரோட்டில் துவங்கியது.

 

இதனை சி.எப்.ஐ தேசிய தலைவர் பி.வி சுஹைப் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணியில்  சி.எப்.ஐ மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவம், புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் தேர்வுக்கு எதிராகவும், பெண்களின் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இறுதியாக பேரணி மாநாடு நடைபெறும் நல்லாயன் சமூகக்கூடத்தில் நிறைவு பெற்றது.



பின்னர், கேம்பஸ் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் எஸ்.முஸ்தபா தலைமையில் மாநில மாணவ எழுச்சி மாநாடு துவங்கியது. சி.எப்.ஐ மாவட்ட தலைவர் கே.பீர் முகமது வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில், சி.எப்.ஐ தேசிய தலைவர் பி.வி சுஹைப் தேசிய தலைவர் பி.வி சுஹைப், எஸ்.டி.பி.ஐ மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், எழுத்தாளர் மதிமாறன், சி.எப்.ஐ தேசிய குழு உறுப்பினர் நூரா மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். மாநாட்டின் இறுதியாக மாநில பொதுச் செயலாளர் அப்துர்ரஹ்மான் நன்றியுரை கூறினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...