திருமணம் செய்ய தடை விதித்த அண்ணனை கொன்ற தங்கை கைது

கோவை செல்வபுரத்தை அடுத்த கல்லாமேடு பகுதியை சேர்ந்தவர் ரேணுகா. இவருக்கு செல்வராஜ் (32) என்ற மகனும், நாகலட்சுமி (23) என்ற மகளும் உள்ளனர். செல்வராஜ் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார். குடும்ப சூழலை கருத்தில் கொண்டு ரேணுகா வேலைக்கு சென்று வந்தார்.

நாகலட்சுமி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். இந்த நிலையில், நாகலட்சுமி மீண்டும் திருமணம் செய்ய போவதாக செல்வராஜிடம் கூறியதாக தெரிகிறது. இதை செல்வராஜ் எதிர்த்துள்ளார். இதனால் அண்ணன் தங்கை இடையே கடந்த சில தினங்களாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இன்று காலை வழக்கம் போல ரேணுகா வேலைக்கு சென்றுவிட அண்ணன்- தங்கைக்கு இடையே வாக்குவாதம் அதிகரித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த நாகலட்சுமி, அவரது அண்ணன் செல்வராஜின் மார்பில் மிதித்துள்ளார். வலியால் துடித்த செல்வராஜின் குரலை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இந்நிலையில், செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுதொடர்பாக, செல்வபுரம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செல்வராஜின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிச்தனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, நாகலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...