விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்காத வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

மேலும் பெரிய தடாகம் பகுதியில் சுற்றித் திரியும் குட்டி பெண் யானையை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். வனவிலங்குகள் விவசாய நிலங்களை நாசம் செய்து வருவதாக குற்றம் சாட்டினர்.

மேலும் விவசாய குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வனத்துறை அதிகாரிகள் வராமல் விவசாயிகளை வனத்துறையினர் அவமதித்துள்ளதாக விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மத்திய அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணம் தொகை போதுமானதாக இல்லை எனவும், கூடுதல் நிவாரண தொகை வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளதாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...