போத்தனூர் - பொள்ளாச்சி இடையே அமைக்கப்பட்ட அகலரயில் பாதையில் இன்று இறுதி கட்ட சோதனை ஓட்டம்



போத்தனூர் - திண்டுக்கல் அகலரயில் பாதை திட்டத்தின் இறுதி கட்டமாக போத்தனூர் பொள்ளாச்சி இடையே அமைக்கப்பட்ட பாதையில் இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஓப்புதல் அளித்த பின்னர் விரையில் போத்தனூரில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு ரயில் சேவையானது துவங்க இருக்கின்றது.



கோவை போத்தனூரில் இருந்து திண்டுக்கல் வரையில் மீட்டர்கேஜ் பாதையாக இருந்த ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர் போரட்டம் நடத்தினர். இதனையடுத்து கடந்த 2007ம் ஆண்டு திண்டுக்கல்  - பொள்ளாச்சி - போத்தனூர் , பொளாச்சி - பாலக்காடு அகல ரயில் பாதைக்கு ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்தது. இதனையடுத்து இந்த திட்டமானது பலகட்டமாக பிரித்து பணிகள் நடைபெற்றது. திண்டுக்கலில் இருந்து பொள்ளாச்சி - பாலக்காடு பணிகள் முடிவடைந்த நிலையில் பொள்ளாச்சி போத்தனூர் வரையிலான  40 கிலோ மீட்டர் தூர பணிகள் மட்டும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் போத்தனூர் பொள்ளாச்சி இடையிலான அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ரயில்வே தெற்கு வட்ட பாதுகாப்பு ஆணையர் மனோகரன் சோதனை ஓட்டத்தினை ஆய்வு செய்தார். 

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், போத்தனூர் பொள்ளாச்சி இடையிலான பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகவும் தொழில்நுட்ப ரீதியில் ரயில் பாதையில் வேகப்பரிசோதனை ஓட்டம் நடத்தப்பட்டு  மத்திய ரயில்வே துறைக்கு அறிக்கை அனுப்பட இருப்பதாகவும் மனோகரன் தெரிவித்தார். இதன் பின்னர் இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்குவது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்யும் என தெரிவித்த அவர், சுமார் 340 கோடி மதிப்பீட்டில் இந்த போத்தனூர் பொள்ளாச்சி அகல ரயில் பாதை திட்டம் முடிவடைந்து இருப்பதாகவும், தென்மாவட்டங்களுக்கு செல்ல இந்த வழித்தடம் முக்கியமானதாக இருக்கும் என  ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தெரிவித்தார். 2007ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட போத்தனூர் பொள்ளாச்சி அகல ரயில் பாதை திட்டம் 10 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவடைந்துள்ளது குறிப்பிடதக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...