பவானி ஆற்றின் குறுக்கே கேளர அரசு அணை கட்ட தடையாணை வாங்க தமிழக அரசு தவறிவிட்டது- பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர்

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் போதுமான ஆதாரங்களை கொடுத்து, முறையாக வழக்கு நடத்தி தடையாணை பெற தவறிவிட்டதாக பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்துவது தொடர்பாக, கோவை காந்திபுரம் பகுதியில் பவானி தடுப்பணை தடுப்பு குழு ஆலோசணைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தி மு க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பவானி தடுப்பணை தடுப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கு.இராமகிருட்டிணன், கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் போதுமான ஆதாரங்களை கொடுத்து முறையாக வழக்கு நடத்தி தடையாணை பெற தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.

மேலும் தடுப்பணை கட்ட தடையாணை பெறாத காரணத்தினால் கேரள அரசு மேலும் தடுப்பணைகள் கட்ட வாய்ப்பாக அமைந்து இருப்பதாகவும், இதன் காரணமாக கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்து தடுப்பணைகள் கட்டுவதற்கு தடையாணை பெற வேண்டுமெனவும் வலியுறுத்திய அவர்,  காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் பவானி ஆற்றில் கேரள அரசு தண்ணீர் எடுக்க எந்தவித வரையறையும் இல்லாத நிலையில், கேரள அரசு தண்ணீர் எடுக்க அனுமதிக்கக்கூடாது என தெரிவித்தார்.

பவானி தடுப்பணை விவகாரத்தில் முறையாக வழக்கு நடத்தாத தமிழக அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் வருகின்ற 30-ம் தேதி கோவையில் அனைத்து கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக கு.இராமகிருட்டிணன் அறிவித்தார்.

மேலும் இந்த விவாகரம் தொடர்பாக பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர் ஏப்ரல் முதல்வாரத்தில் கேரள முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...