இஸ்லாத்தில் பிறந்து கடவுள் மறுப்பு கொள்கை பேசுபவர்களின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்- அனைத்து ஜமா-அத்களின் கூட்டமைப்பு

கோவையில் கடந்த 16 ம் தேதி திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த பாருக் என்பவர் கும்பல் ஒன்றால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் அன்சர்த் என்பவர் சரணடைந்த நிலையில், படுகொலைக்கு அனைத்து ஜமா-அத் கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 



பாரூக்-ன் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று கோவை அனைத்து ஜமா-அத் கூட்டமைப்பினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில செயலாளர் உமர் கூறியதாவது :- 

இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறியாகும். இது யாரையும் கட்டாயப்படுத்துவது கிடையாது. கடவுளை மறுப்பதும், வணங்குவதும் ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரம். அவ்வாறு வாழ்ந்த ஒருவரை கும்பல் ஒன்று கொலை செய்ததை இஸ்லாம் எந்த விதத்திலும் ஏற்காது. இந்த படுகொலையை அனைத்து ஜமா-அத்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. 

சில  தனிப்பட்ட நபர்கள் செய்த தவறுக்கு ஒரு சமூகத்தை விமர்சனம் செய்வது எந்த வகையிலும் தீர்வாகாது.

கொலை செய்ததாக நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள அன்சார்த் எந்த ஜமாத்-திலும் இருப்பதாக தெரியவில்லை. படுகொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு எங்கள் கூட்டமைப்பின் சார்பில் உதவிகளை செய்வோம். 

இளைஞர்கள் சிலர் தீய வழியில் செல்வதை தடுக்க அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க எங்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது. இஸ்லத்தில் பிறந்து கடவுள் மறுப்பு கொள்கை பேசுவது அவரின் தனிப்பட்ட கருத்து. அவ்வாறு கடவுள் மறுப்பு கொள்கை பேசுபவர்களின் பாதுகாப்பை காவல்துறை தான் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...