கோவையில் வரும் மார்ச் 26-யில் முன்னாள் படைவீரர் திரளணி

கோவை மாவட்டம், காளப்பட்டி சாலை, சிட்ரா அருகில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் முன்னாள் படைவீரர்கள் திரளணி நடைபெறவுள்ளது. 

அன்றைய தினம் காலை 8 மணியளவில் துவங்கவுள்ள இந்நிகழ்ச்சிக்கு தென்பிராந்திய படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.கே.ஆனந்த் முன்னிலை வகிக்கிறார். கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் கி.எம்.ஹரீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்திய இராணுவத்தின் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றைக் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்தம் குடும்பத்தினர் மற்றும் போர் விதவையர் குறைகளை மனுக்களாக தெரிவித்து பயனடையலாம்.

இம்முகாமில், சென்னை இராணுவ மருத்துவமனை நடத்தும் மருத்துவ முகாமும் நடைபெறும். இதில், பல்வேறு படை ஆவணகாப்பகங்கள், வங்கிகள், சென்னையில் உள்ள இராணுவ உதவி மையத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இம்முகாமில் பங்கேற்கவுள்ள முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் தங்களது அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை மற்றும் முன்னாள் படைவீரர் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருதல் அவசியம். 

எனவே, கோவை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முன்னாள் படைவீரர் நல அலுவலகம் உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...