கவுண்டம்பாளையம் அருகே வீட்டிற்குள் புகுந்த நாகபாம்பு - லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட தீயணைப்பு வீரர்கள்

கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கவுண்டர்மில்ஸ் பகுதியில் வீட்டிற்குள் புகுந்த இரண்டு அடி நீளமுள்ள நாகபாம்புவை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து ஆனைக்கட்டி வனப்பகுதியில் விட்டனர்.


கோவை: வீட்டில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென வந்த நாகப்பாம்புவை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் பயத்தில் நடுங்கினர்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கவுண்டர்மில்ஸ் திருவள்ளுவர் வீதியில் வசிப்பவர் ஸ்ரீதர். சொந்தமாக கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று இவரது வீட்டில் குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருந்தபோது, தீடிரென நாகபாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த அவர்கள் சத்தம்போட அங்கு வந்த ஸ்ரீதர் உடனடியாக டப்பா வைத்து நாகபாம்பை மூடி வைத்துவிட்டு கவுண்டம்பாளையத்திலுள்ள கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் டப்பா வைத்து மூடி வைக்கப்பட்டு இருந்த நாகபாம்பை பிடித்தனர். அப்போது அந்த பாம்பு 2 அடி தான் இருந்தது. ஆனால் என்னை பிடிக்க வந்தது யார் என்று கேட்பதுபோல படமெடுத்து பயத்தை அங்கிருந்தவர்களுக்கு காட்டியது.



உடனே வீரர்கள் லாவகமாக பாம்பை பிடித்து சாக்கில் போட்டு கட்டி எடுத்தனர்.

தொடர்ந்து அவர்கள் அந்த பாம்பை ஆனைகட்டி மலைப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். 2 அடி உள்ள பாம்பை பிடிக்க தண்ணீருடன் இருந்த தீயணைப்பு லாரியை எடுத்துக்கொண்டு வரவேண்டிய நிலைமை இருந்தது. இதுபோன்ற இடத்திற்கு செல்ல சின்ன வாகனம் தீயணைப்பு துறைக்கு கொடுத்தால் அவர்கள் விரைவாக வந்து வேலையையும் விரைவாக முடிக்க ஏதுவாக இருக்கும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...