கவுண்டம்பாளையம் அருகே வீட்டிற்குள் புகுந்த நாகபாம்பு - லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட தீயணைப்பு வீரர்கள்

கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கவுண்டர்மில்ஸ் பகுதியில் வீட்டிற்குள் புகுந்த இரண்டு அடி நீளமுள்ள நாகபாம்புவை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து ஆனைக்கட்டி வனப்பகுதியில் விட்டனர்.


கோவை: வீட்டில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென வந்த நாகப்பாம்புவை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் பயத்தில் நடுங்கினர்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கவுண்டர்மில்ஸ் திருவள்ளுவர் வீதியில் வசிப்பவர் ஸ்ரீதர். சொந்தமாக கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று இவரது வீட்டில் குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருந்தபோது, தீடிரென நாகபாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த அவர்கள் சத்தம்போட அங்கு வந்த ஸ்ரீதர் உடனடியாக டப்பா வைத்து நாகபாம்பை மூடி வைத்துவிட்டு கவுண்டம்பாளையத்திலுள்ள கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் டப்பா வைத்து மூடி வைக்கப்பட்டு இருந்த நாகபாம்பை பிடித்தனர். அப்போது அந்த பாம்பு 2 அடி தான் இருந்தது. ஆனால் என்னை பிடிக்க வந்தது யார் என்று கேட்பதுபோல படமெடுத்து பயத்தை அங்கிருந்தவர்களுக்கு காட்டியது.



உடனே வீரர்கள் லாவகமாக பாம்பை பிடித்து சாக்கில் போட்டு கட்டி எடுத்தனர்.

தொடர்ந்து அவர்கள் அந்த பாம்பை ஆனைகட்டி மலைப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். 2 அடி உள்ள பாம்பை பிடிக்க தண்ணீருடன் இருந்த தீயணைப்பு லாரியை எடுத்துக்கொண்டு வரவேண்டிய நிலைமை இருந்தது. இதுபோன்ற இடத்திற்கு செல்ல சின்ன வாகனம் தீயணைப்பு துறைக்கு கொடுத்தால் அவர்கள் விரைவாக வந்து வேலையையும் விரைவாக முடிக்க ஏதுவாக இருக்கும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...