ஓலா மற்றும் உபர் உள்ளிட்டவற்றின் போட்டிகளை எதிர்கொள்ள மூவ்லி நிறுவனத்துடன் கைகோர்த்த உழைக்கும் கரங்கள்

கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உழைக்கும் கரங்கள் ஆட்டோ சேவை உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நலச் சங்கம் மூவ்லி நிறுவனத்துடன் இணைந்து மொபைல் செயலி சேவையினை உருவாக்கியுள்ளது.



செயலிகள் மூலம் இயக்கப்படும் டேக்சி உள்ளிட்ட ஆட்டோ சேவையினால் நாடுமுழுவதும் உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள் மிகப்பெரியளவில் பாதிக்கப்பட்டு போராட்டங்களில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. தொடர்ந்து நடுத்தர ஆட்டோ ஓட்டுநர்கள் ஓலா, உபர் உள்ளிட்ட டேக்சி சேவையினை எதிர்த்தும், போட்டியிட்டும் வருகின்றனர். இதுபோன்ற பெரிய நிறுவனங்களின் போக்குவரத்து சேவையினால் உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரியளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. அவர்களால், தங்களது வாகனத்தின் வாடகை கூட செலுத்தமுடியாமல் திவாலாகின்றனர்.



இந்நிலையில், உழைக்கும் கரங்கள் ஆட்டோ சங்கமும், மூவ்லி நிறுவனமும் இணைந்து இந்தியாவில் முன்னோடியாக ஒரு டேக்சி சேவை செயலியினை அறிமுகம் செய்துள்ளனர். இந்த செயலியின் மூலம் மக்களின் சேவைக்கு கோவை மாவட்டத்தில் 375 டேக்சி, ஆட்டோ வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

இதற்காக, கூடுதல் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமும், பயிற்சியினையும் மூவ்லி ஆதரவாக வழங்கவுள்ளது. இந்த கூட்டமைப்பின் முயற்சி சமுதாயத்திலும், சந்தை நிலவரத்திலும், டேக்சி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்திலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என மூவ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து உழைக்கும் கரங்கள் தலைவர் பி.ராஜா கூறுகையில், இந்த செயலியினாது மிகப்பெரும் டேக்சி சேவை நிறுவனங்களால் பாதிக்கப்பட்டு வந்த உள்ளூர் ஓட்டுநர்களுக்கு ஒரு நிவாரனமாக அமைந்துள்ளது. எங்களுக்கென தனி அங்கீகாரம் கிடைத்ததைப் போல உணர்கிறோம். வாடிக்கையாளர்களிடமும், ஓட்டுநர்களிடமும் இம்முயற்சி நல்ல நட்புறவை ஏற்படுத்தும். இதன் மூலம் விரைவில் எங்களது வாழ்வாதாரம் உயரும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...