சுங்கம் பணிமனை கிளை மேலாலரைக் கண்டித்து அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிமனை முன்பு போராட்டம்


கோவை சுங்கம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை கிளை மேலாளரை கண்டித்தும், செம்மேடு பகுதியில் இயக்கப்பட்ட பேருந்தின்  ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தக்கியவர்களை கைது செய்யக் கோரியும், பேருந்துகளை இயக்க மறுத்து பணிமனை முன்பாக  50 க்கு மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நேற்று முந்தினம், கோவை வெள்ளிங்கிரி அடிவாரத்தில் இருந்து  காந்திபுரம்  நோக்கி வந்து  அரசு பேருந்தை,  செம்மேடு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் மறித்து உள்ளனர். குடி போதையில் இருந்த காரணத்தால், பேருந்தை முன்னேரி செல்ல வழிவிடாமல் தகராரில் ஈடுபட்டதுடன், ஓட்டுநர் ராஜு மற்றும் நடத்துனர் செந்திலை தாக்கி உள்ளனர். இது தொடர்பாக ஆலந்துறை காவல்நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்த ராஜு, விசாரணைக்காக காவல்நிலையம் செல்ல வேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் , கிளை மேலாளர் அனுமதி அளிக்க மறுத்து பேருந்தை இயக்க வற்புறுத்தி உள்ளார். இதனால்  ஆத்திரம் அடைந்தத அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள்  50 க்கும் மேற்பட்டோர் பணிமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளை மேலாளரின் அலட்சிய போக்கை கண்டித்தும், செம்மேடு  அருகே அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கியவர்களை  உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

போராட்டம் காரணமாக சுங்கம் பணிமனையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாததை அடுத்து அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரமாக போராட்டம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...