நொய்யல் திருவிழாவில் காவடி ஆட்டம் ஆடிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

கோவை பேரூரில் நடைபெற்று வரும் நொய்யல் திருவிழாவில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்த நிலையில் காவடி ஆட்ட குழுவினருடன் இணைந்து காவடி ஆட்டம் ஆடி உற்சாகப்படுத்தினார்.



கோவை: நொய்யல் திருவிழாவில் கலந்து கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை உற்சாகத்துடன் காவடி ஆட்டம் ஆடினார்.

கோவை பேரூர் ஆதீன மடத்தில், பாரதீய சன்யாசிகள் சங்கம் சார்பில் நொய்யல் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் தலைமையில் நடைபெற்று வருகிறது.

நொய்யல் ஆற்றை காப்பதை மையமாக கொண்டு நடைபெறும் இந்நிகழ்விற்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.



அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

அப்போது அவர், அங்கு நடைபெறும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார். முன்னதாக அவர் காவடி ஆட்ட கலைக் குழுவினருடன் இணைந்து காவடி ஆட்டம் ஆடினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...