ஈஷா யோகா மையத்தில் குளித்த போது கல்லூரி மாணவர் பலி


கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ஈஷா யோகா மையம். இங்கே, மெர்க்குரி உள்ளிட்ட பாதரசங்களால் ஆன சிலை அடங்கிய சூரிய குண்டம் என்னும் நீராடும் பகுதியில் குளித்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



திருவண்ணாமலை மாவட்டம், கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த மன்னார்சாமி என்பவரது மகன் ரமேஷ் (21). வேலூர் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்றில் சிவில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், சகமாணவர் அனைவரும் இணைந்து உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக திட்டமிட்டுள்ளனர். அதன்படி இன்று காலை உதகை செல்லும் முன்பாக வெள்ளியங்கிரி மலையடிவாரப் பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளனர். 

அங்கு, சூரிய குண்டம் என்னும் நீராடும் பகுதியில் மாணவர்கள் குளித்துக்கொண்டிருந்த நிலையில் ரமேஷ்-க்கு அதிகப்படியான குளிரின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனால், பொது மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்போது உயிரிழந்த மாணவரின் உடல் கோவை அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலந்துரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுற்றுலாவிற்காக ஈஷா யோகா மையத்திற்கு வந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் சகமாணவர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...