கோவை போக்குவரத்து மாற்றங்கள் குறித்து போக்குவரத்து துறை ஆணையாளர் சண்முகசுந்தரம் ஆய்வு!

கோவை மாநகரில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையாளர் சண்முகசுந்தரம் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, சீரான போக்குவரத்துக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.


கோவை: கோவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து போக்குவரத்து துறை ஆணையாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை மாநகரில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையாளர் சண்முகசுந்தரம், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



அவருடன் மாநகர காவல் ஆணையாளர் போக்குவரத்து மதிவாணன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் மற்றும் காவல் துறையினர் சென்றனர்.



அப்போது திருச்சி சாலை சுங்கம், சுங்கம் மேம்பாலம், சிங்காநல்லூர், அவிநாசி சாலை, உப்பிலிபாளையம் சந்திப்பு, காந்திபுரம் பேருந்து நிலையம் சந்திப்பு, பார்க் கேட் ரவுண்டானா உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.



பின்னர், போக்குவரத்து சீராக செல்வதற்கும், சிக்னல்கள் பணிகள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் குறித்தும் கேட்டறிந்து சீரான போக்குவரத்துக்கு தேவையான நடவடிக்கைகளை அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...