தனியார் குடியிருப்பு மற்றும் மருத்துவமனை கழிவு நீரை ஓடையில் திறந்துவிடுவதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், தாளியூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தனியார் மருத்துவமனை கழிவு நீரினை மழை நீர் வடிகால் மூலம் ஓடையில் திறந்துவிடுவதை தடுக்கக் கோரி ஏபிஜே அம்துல்கலாம் பசுமை பாதுகாப்பு திட்டம் 2020 சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பாக ஏபிஜே அம்துல்கலாம் பசுமை பாதுகாப்பு திட்டம் 2020 அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், தாளியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கலிங்கநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் சாலையில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் ஓனாப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் இருந்து கழிவு நீரானது இரவு நேரங்களில் அருகில் உள்ள மழை நீர் வடிகாலின் மூலம் திறந்து விடப்படுகிறது.

அந்த நீரானது மழை நீர் வடிகாலின் மூலம் வந்து கலிங்கநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள ஓடையில் கலக்கின்றது.

அது, கலிங்கநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட வார்டு எண் 7, 4 மற்றும் 18 ஆகிய வார்டு மக்கள் குடியிருப்பு பகுதி வழியாக செல்லும் மழை நீர் ஓடையில் சென்று நொய்யல் ஆற்றை அடைகிறது.

மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஓடை, வருவாய் துறையினரால் தூர்வாரப்படாததால் கழிவு நீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி நின்று அங்கு துர்நாற்றம் மற்றும் கொசு தொல்லை அதிகரிக்கின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் தொற்று ஏற்படுகின்றது.

எனவே, அந்த தனியார் நிறுவனங்களின் கழிவு நீரை ஓடையில் விடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...