பீளமேடு மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்திட அனைத்துக் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு தற்போது வரை முடிக்கப்படாமல் உள்ளது. மேம்பாலப் பணிகள் மெத்தனமாக நடைபெறுவதால் பீளமேடு அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், பொது மக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

மேலும், கருப்புக் கொடி கட்டுவது, உண்ணாவிரதம், அறப்போராட்டங்கள் உள்ளிட்டவை மேற்கொண்டும் தற்போது வரை அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டதைப் போன்றே உள்ளது.

மேலும், பீளமேடு ரயில் பாதைக்கு முன்புறத்தில் எஸ்ஏஐஎல் என்னும் நிறுவனம் மேம்பாலம் அருகில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து இரும்பு தளவாடங்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகளங்கள் தற்போதுள்ள சர்வீஸ் சாலையில் வந்து செல்வதால் சாலை எழிதில் பழுதடைவதுடன் பொதுமக்களுக்கும் பெருமளவில் இடையூறாக உள்ளது.

எனவே, இந்த எஸ்ஏஐஎல் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்னும் நிறுவனத்தை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும். மேலும், உடனடியாக பீளமேடு மேம்பாலப் பணிகளை முடிக்க வேண்டும்' என இன்று அதிமுக, திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், தேமுதிக, பீளமேடு கன்சியூமர் வாய்ஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...