தாழ்த்தப்பட்டவர் மட்டுமே துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற அரசாணையை எரித்து தாபெதிக போராட்டம்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் துப்புரவு பணியிடங்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் விண்னப்பிக்க வேண்டும் என்ற அரசானையை கண்டித்து கோவையில் அரசானை நகலை எரித்து போராட்டம் மேற்கொண்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் காலியாக உள்ள 20 துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என சமீபத்தில் அரசானை வெளியிடப்பட்டது. இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் எதிப்பு தெரிவித்துள்ளது.மேலும் இந்த அரசானை குலத்தொழிலுக்கு வழி வகுக்கும் என தெரிவித்து, அரசானை நகலை எரிக்கும் போராட்டம் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு நடைபெற்றது.

கழக அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர் தொடர்ந்து போராட்டத்தின் போது அரசானையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை போலிசார் கைது செய்தனர். இது குறித்து அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி கூறுகையில் தாழ்த்தப்பட்ட மக்களை குலத்தொழிலுக்கு திரும்ப அழைக்கும் வகையில் இந்த அரசானை உள்ளதாகவும், இது திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...