விரைவில் அமலாகிறது ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு கட்டாய ஆதார் எண்

ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படும் திட்டம் விரைவில் அமலாகும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். இதன் மூலம் போலி அடையாள அட்டைகள் மூலம் பெரிய எண்ணிக்கைகளில் ரயில்வே டிக்கெட்டுகளை புக் செய்வதை தடுப்பதும், மோசடியான டிக்கெட் முன்பதிவுகளையும், ஆள்மாறாட்டத்தையும் தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். மூத்த குடிமக்கள் ரயில் டிக்கெட்டுகளுக்கான சலுகைகளைப் பெற வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது, இதற்கான 3 மாத வெள்ளோட்டமும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 2017-18-க்கான புதிய வர்த்தக திட்டத்தை வெளியிட்ட மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, ஆதார் எண் கட்டாயமாக்கப்படும் திட்டத்துடன், நாடு முழுதும் ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக 6,000 பி.ஓ.எஸ் இயந்திரங்களையும், நாடு முழுதும் 1,000 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களையும் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார். மேலும் பணமற்ற பரிவர்த்தனையை வளர்க்கும் விதமாக ஒருங்கிணைந்த டிக்கெட் ஆப் ஒன்றையும் மே மாதம் அறிமுகம் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

“ஐஆர்சிடிசி இணையத்தில் ஒருமுறை பதிவாக ஆதார் எண் கட்டாயமாக்கப்படவுள்ளது. இதன் மூலம் போலி அடையாள அட்டைகள் மூலம் பெரிய அளவில் டிக்கெட்டுகளை பிளாக் செய்வது தடுக்கப்படும்” என்று மூத்த ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்காக ரயில்வே மென்பொருள் ஒன்றையும் ரயில்வே துறை தயாரித்து வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். மேலும் இந்த புதிய வர்த்தகத் திட்டத்தில் மலைவாசஸ்தலங்களை இணைக்க புதிய சுற்றுலா ரயில்களை அறிமுகம் செய்யவும் முடிவெடுத்துள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...