முதுமலையில் வாகனங்களை துரத்திய காட்டுயானை - வைரலாகும் வீடியோ!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி - தெப்பக்காடு நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாகத் துரத்தி விரட்டியது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தற்பொழுது கோடை காரணமாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி இடம் பெயர தொடங்கி உள்ளன.

குறிப்பாக, முதுமலைக்குள் உள்ள பிரதான சாலைகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் சாலை ஓரத்திற்கு வரும் யானைகளை வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்வதால், அவை வாகனங்களை தூரத்தவும் செய்கின்றன.



இந்த நிலையில், நேற்று மாலை மசினகுடி - தெப்பக்காடு சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், சாலை ஓரத்தில் இருந்த ஒற்றை காட்டுயானையை சீண்டியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த ஒற்றை யானை ஆக்ரோஷமாக, அவ்வழியாக வந்த தாக்க ஓடிவந்தது.



இதனால் அச்சமடைந்த சுற்றுலா பயணிகள் வாகனங்களை பின்னோக்கி எடுத்துச்சென்று தப்பித்தனர். சிறிது நேரம் கழித்து, யானை மீண்டும் மூங்கில்களை உடைத்து சாப்பிட்டு அதன் பின்பு வனப்பகுதிகுள் சென்றது. அந்த காட்சி தற்போது சமூகவலை தலங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனிடையே, சாலையோரத்திற்கு வரும் வன விலங்குகளை பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...