முதுமலையில் வாகனங்களை துரத்திய காட்டுயானை - வைரலாகும் வீடியோ!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி - தெப்பக்காடு நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாகத் துரத்தி விரட்டியது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தற்பொழுது கோடை காரணமாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி இடம் பெயர தொடங்கி உள்ளன.

குறிப்பாக, முதுமலைக்குள் உள்ள பிரதான சாலைகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் சாலை ஓரத்திற்கு வரும் யானைகளை வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்வதால், அவை வாகனங்களை தூரத்தவும் செய்கின்றன.



இந்த நிலையில், நேற்று மாலை மசினகுடி - தெப்பக்காடு சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், சாலை ஓரத்தில் இருந்த ஒற்றை காட்டுயானையை சீண்டியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த ஒற்றை யானை ஆக்ரோஷமாக, அவ்வழியாக வந்த தாக்க ஓடிவந்தது.



இதனால் அச்சமடைந்த சுற்றுலா பயணிகள் வாகனங்களை பின்னோக்கி எடுத்துச்சென்று தப்பித்தனர். சிறிது நேரம் கழித்து, யானை மீண்டும் மூங்கில்களை உடைத்து சாப்பிட்டு அதன் பின்பு வனப்பகுதிகுள் சென்றது. அந்த காட்சி தற்போது சமூகவலை தலங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனிடையே, சாலையோரத்திற்கு வரும் வன விலங்குகளை பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...