சேலம் ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பு தூய்மைப் பணிகள்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இந்திய ரயில்வேயினால் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் துப்புறவுப் பணிகளின் ஒரு பகுதியாக இன்று (23.02.2017) சேலம் ரயில்நிலையத்தில் சிறப்பு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



நிரங்காரி பாபா ஹர்தேவ் சிங் அவர்களின் 63-வது பிறந்த நாள் நினைவை ஒட்டி நடைபெற்ற இந்த சிறப்பு தூய்மைப் பணிகளில், சந்த் நிரங்காரி அறக்கட்டளையின் 45 தன்னார்வத் தொண்டர்கள் ரயில்வே ஊழியர்களுடன் கலந்து கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். 



சேலம் கோட்ட உதவி வணிக மேலாளர் எம். ஷாஜஹான் மற்றும் உதவி சுகாதார அலுவலர் எஸ்.குமார் ஆகியோர் இந்நிகழ்விற்கு தலைமை வகித்தனர். 



இந்திய ரயில்வேயில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளில் சந்த் நிரங்காரி அறக்கட்டளையின் பங்களிப்பை பாராட்டிய சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரி சங்கர் வர்மா, சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இத்தகு சிறப்பு தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.



Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...