வால்பாறையில் குறுத்தோலை ஞாயிறு தின விழா - குறுத்தோலை ஏந்தி பவனி வந்த கிறிஸ்தவர்கள்!

குறுத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி வால்பாறையில் உள்ள பல்வேறு தேவாலயங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள், கையில் குறுத்தோலை ஏந்தி, ஒசானா பாடல் பாடியபடி பவனி வந்தனர். கல்லூரி வளாகம் அருகே தொடங்கிய ஊர்வலம், சி.எஸ்.ஐ ஆலயத்தில் நிறைவடந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறை அருகே குறுத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் குறுத்தோலை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர்.

உலகம் முழுவதிலுமுள்ள கிறிஸ்தவர்களால் இன்று குறுத்தோலை ஞாயிறு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்டம் வால்பாறையிலும் கிறிஸ்தவர்களால் குறுத்தோலை ஞாயிறு தினம் அனுசரிக்கப்பட்டது.



அதன்படி வால்பாறையிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் சி.எஸ்.ஐ மறை மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் இணைந்து கல்லூரி வளாகம் அருகே தங்களது குறுத்தோலை பவனியை தொடங்கினர்.



கையில் குறுத்தோலையை ஏந்தியபடி ஒசானா பாடல் மற்றும் இயேசுவின் தாசனே என்ற பாடலை பாடி பவனியாக சி.எஸ்.ஐ ஆலயம் வளாகம் வந்தனர். இதனையடுத்து, ஆலய ஆயர் பால் சுந்தர் சிங் தலைமையில் விசேஷ பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் வால்பாறை இருதய ஆலய பங்கு தந்தை ஜெகன் ஆண்டனி, இம்மானுவேல் ஆகியோர் தலைமையில், விசேஷ பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்னர் பவனியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக இருதய ஆலயத்தை அடைந்து குறுத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது.



இதேபோல வால்பாறை அடுத்துள்ள முடிஸ் புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்கு தந்தை மரிய ஆன்டணி தலைமையிலும் குறுத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...