வால்பாறையில் குறுத்தோலை ஞாயிறு தின விழா - குறுத்தோலை ஏந்தி பவனி வந்த கிறிஸ்தவர்கள்!

குறுத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி வால்பாறையில் உள்ள பல்வேறு தேவாலயங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள், கையில் குறுத்தோலை ஏந்தி, ஒசானா பாடல் பாடியபடி பவனி வந்தனர். கல்லூரி வளாகம் அருகே தொடங்கிய ஊர்வலம், சி.எஸ்.ஐ ஆலயத்தில் நிறைவடந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறை அருகே குறுத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் குறுத்தோலை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர்.

உலகம் முழுவதிலுமுள்ள கிறிஸ்தவர்களால் இன்று குறுத்தோலை ஞாயிறு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்டம் வால்பாறையிலும் கிறிஸ்தவர்களால் குறுத்தோலை ஞாயிறு தினம் அனுசரிக்கப்பட்டது.



அதன்படி வால்பாறையிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் சி.எஸ்.ஐ மறை மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் இணைந்து கல்லூரி வளாகம் அருகே தங்களது குறுத்தோலை பவனியை தொடங்கினர்.



கையில் குறுத்தோலையை ஏந்தியபடி ஒசானா பாடல் மற்றும் இயேசுவின் தாசனே என்ற பாடலை பாடி பவனியாக சி.எஸ்.ஐ ஆலயம் வளாகம் வந்தனர். இதனையடுத்து, ஆலய ஆயர் பால் சுந்தர் சிங் தலைமையில் விசேஷ பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் வால்பாறை இருதய ஆலய பங்கு தந்தை ஜெகன் ஆண்டனி, இம்மானுவேல் ஆகியோர் தலைமையில், விசேஷ பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்னர் பவனியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக இருதய ஆலயத்தை அடைந்து குறுத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது.



இதேபோல வால்பாறை அடுத்துள்ள முடிஸ் புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்கு தந்தை மரிய ஆன்டணி தலைமையிலும் குறுத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...