பல்லடத்தில் ரூ.200 கோடி மோசடி செய்தவர்கள் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரிக்கை

பல்லடத்தில் பத்திரங்களை அடமானம் வைத்து 200 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தவர்களை கைது செய்யாமல் காவல்துறை மெத்தனபோக்கோடு செயல்படுவதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: ரூ.200 கோடிக்கும் மேல் மோசடி செய்தவர்களை கைது செய்யாமல் காவல்துறை அலட்சியமாக இருப்பதால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வேலப்பா கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன்கள் விஜயகுமார் மற்றும் சிவக்குமார். இருவரும் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பலரை நூல் வியாபாரத்தில் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்வதாக கூறி அவர்களின் சொத்து பத்திரங்களை அடமானம் வைத்து ரூ.200 கோடிக்கும் மேல் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மூன்று நாட்களுக்கு முன்பு விஜயகுமாரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிவக்குமார், விஜயகுமார் மற்றும் அவரது மகன் ராகுல் பாலாஜி, பிரவீனா ஆகியோர் தங்களை தொழில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி வீடு, இடம், நில பத்திரங்களை வாங்கி வங்கிகளில் அடமானம் வைத்து ரூ.200 கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்ததாக கூறி பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு பின்பு வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் விசாரணைக்கு ஆஜர்படுத்துமாறு பல்லடம் நீதிமன்றம் ஒரு மாதத்திற்கு முன் பிடிவாரண்ட் பிறப்பித்தும், போலீசார் அவர்களை கைது செய்ய தாமதப்படுத்துவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த குமரேசன் என்பவர் பிரவீனா மீது அளித்திருந்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்து பிரவீனாவை தேடி வந்த பல்லடம் போலீசார் நேற்று பல்லடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பிரவீனாவை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திருப்பூர் மகளிர் சிறையில் அடைத்தனர்.



இந்நிலையில் இன்று பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தாங்கள் தினம், தினம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கைது செய்யப்பட்ட பிரவீனா விதவிதமான ஆடைகளில் சினிமா பாடலுக்கு "Facebook reels" போட்டுக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் காவல்துறையினர் தலைமறைவாக உள்ள மோசடி கும்பலை கைது செய்யாமல் அலட்சியப்படுத்தி வருவதாகவும், மோசடி கும்பலுக்கு காவல்துறை துணை போவதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறினர். எனவே இந்த மோசடி வழக்கினை சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...