கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி

வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் உடல்நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மேற்கொண்ட சிகிச்சையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

கடந்த சில தினங்களாக கோவையில் பல்வேறு பகுதியிலிருந்து பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக தற்போது வரை பன்றிக் காய்ச்சலுக்கு 34 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 7 பேரும், மர்ம காய்ச்சலுக்கு 24 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கோவையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை 17 பேர் பன்றிக்காய்ச்சலால் பலியாகி உள்ளனர். இதில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் 5 பேர் பலியாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக கோவையில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். திடீரென காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அனுக வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். 

கோவையில் அதிகளவு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் அலட்சியத்தால் ஒருவர் இறந்ததாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...